மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பேரணி

கோவையில் சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பேரணியை இன்று (7.11.2020) நடத்தினர். கடந்த வாரம் சிறைத்துறை மைதானத்தில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வுக்கான இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். இந்த பேரணியை சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த பேரணி காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் தொடங்கி நஞ்சப்பா சாலை வழியாக சென்று சிறை வளாகம் முன்பு வரை சென்றது. பேரணியின் ஒருபகுதியாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டன.