30ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்களையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மதுபான கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மது கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக மேற் குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என அறிவித்துள்ளது.