டிப்ளமோ அரியர் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம்…

டிப்ளமோ அரியர் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம்… உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

டிப்ளமோ அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

டிப்ளமோ மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தாம் மறுமதிப்பீட்டு முடிவுக்காக காத்திருந்த நிலையில், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்துவிட்டதாகவும், மறுமதிப்பீட்டில் தோல்வி என வந்ததால், மீண்டும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த சென்றபோது, கால அவகாசம் முடிந்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், அனைத்து டிப்ளமோ மாணவர்களின் நிலை கருதி, அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி வாய்ப்பாக மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தினார்.