கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை! சாக்கடை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோவையை பொருத்தவரை  அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகரில் காந்திபுரம், டவுன்ஹால் ஆர்.எஸ்.புரம் ராமநாதபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சாலைகளில் சாக்கடைகளில் கலந்து ஆறு போல ஓடுகிறது. அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு கீழே சாக்கடையோடு சேர்ந்து மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.