பழங்குடியின விவசாயிகளுக்கு தாவர நூற்புழு குறித்து ஒருநாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நூற்புழுவியல் துறை சார்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த நூற்புழு திட்டம் மற்றும் பழங்குடியின துணைத் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தம்மபதி கிராம பழங்குடியின விவசாயிகளுக்கு தாவர நூற்புழுக்களும் அதன் மேலாண்மையும் குறித்து ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டன.

வரவேற்புரை வழங்கிய நூற்புழுவியல் துறை, உதவி பேராசிரியர் கலையரசன், கண்ணுக்குப் புலப்படாத இத்தாவர நூற்புழுக்கள் எவ்வாறு பயிர்களை பாதித்து மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது என்பதனை எடுத்துரைத்தார்.

நூற்புழுவியல் துறை உதவி பேராசிரியர் சுவர்ணகுமாரி இந்நூற்புழுக்களை எவ்வாறு இயற்கை முறையில் உயிர் நூற்புழுக்கொல்லி பூஞ்சாணத்தைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் என்பதனை விளக்கினார். இப்பயிற்சியில் பங்குபெற்ற 100க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக் கருவிகள் மற்றும் பயிற்சி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் இறுதியில் இப்பயிற்சி நடைபெற உறுதுணையாக இருந்த நூற்புழுவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சாந்தி, அவர்களுக்கும் பங்குபெற்ற விவசாயிகளுக்கும் சுபசக்திகுமார் நன்றி கூறினார்.