அண்ணாவின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய அதிமுவினர்

பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோவையில் ஆவின் தலைவர் கே.பி.ராஜு, ப.வெ.தாமோதரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து கோவையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் அலுவலகத்திலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் தனிமனித இடைவெளியுடன் கலந்துகொண்டார்கள்.