வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தும் தமிழ்மொழி திறன்வளர் போட்டிகள்

வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி நடத்தும் 35வது ஆண்டு வள்ளல் பாண்டித்துரை அவர்களின் நினைவு தமிழ்மொழி திறன்வளர் போட்டிகள்.

பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வளப்படுத்தவும் இவ்வாறு போட்டிகளை வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வள்ளல் பாண்டித்துரை அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்மொழியில் பல போட்டிகளை வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தி வந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவினைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இணையம் வழியாக இந்தப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்தும் 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 21.9.2020 தேதிக்குள்  இணையம் வழியில் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை இணையம் வழி சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி :

பேச்சுப் போட்டி : 30.09.2020
பரதநாட்டியப் போட்டி : 05.10.2020
பாடல் போட்டி : 01.10.2020

போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம்   ரூபாய் 4 லட்சத்திற்கும் பரிசுகள் வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாது இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, www.velamalnexus.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது 73583 90402 என்ற கைபேசி எண்ணை அழைக்கவும்.