தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்றய தினம் பலத்த கனமழை பெய்தது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம் கீழ் வெள்ளநீர் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.