கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு !

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று (1.9.2020) 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஒரே நாளில் உச்சபட்ச அளவாக 589ஆக இருந்தது.

இதுவரை கோவையில் ஒரே நாளில் 500க்கும்  குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்த சூழலில், நேற்று எண்ணிக்கை 500ஐ கடந்திருந்தது. இந்த சூழலில், இரண்டாவது நாளாக இன்றும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

இதன் மூலம் கோவையில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 71ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.