உலக கடித தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைப் பாராட்டும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றையக் கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனைக் கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.