கோவையில் இன்று 392 பேருக்கு கொரோனா உறுதி

கோவை அரசு மருத்துவமனை பெண் மருத்துவ அலுவலர் உள்பட 392 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மேலும் 31 வயது செவிலியர், 26, 35 வயது ஆண் மருத்துவப் பணியாளர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் 53 வயது ஆண் மருத்துவப் பணியாளர், சூலூர் விமானப்படையை சேர்ந்த 28 வயது விமானப் படை வீரர், மதுக்கரை ராணுவ முகாமை சேர்ந்த 38 வயது ராணுவ வீரர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுக்கரை வட்டாரத்தில் 24 பேருக்கும், மேட்டுப்பாளையத்தில் 13 பேருக்கும், ராமநாதபுரத்தில் 13 பேருக்கும், ஆர்.எஸ்.புரத்தில் 12 பேருக்கும், பொள்ளாச்சியல் 10 பேருக்கும், சிங்காநல்லூர், சூலூரில் தலா 9 பேருக்கும், கணபதியில் 8 பேருக்கும், போத்தனூர், சீரநாயக்கன்பாளையத்தில் தலா 6 பேருக்கும் என இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 392 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.