கோவையில் ஒரு வாரத்திற்கு பிறகு சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

கோவையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 5 பேர் பலியாகியுள்ளனர்.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 17 பேர், செல்வபுரத்தை சேர்ந்த 8 பேர், காந்திமாநகரை சேர்ந்த 6 பேர், குனியமுத்தூர், உக்கடத்தை சேர்ந்த தலா 5 பேர் உள்பட மொத்தம் 183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் என்ணிக்கை 6 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்த 89 வயது முதியவர், 67 வயது முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வீரகேரளத்தை சேர்ந்த 75 வயது முதியவர், குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சூலூர் அண்ணாமலை நகரை சேர்ந்த 44 வயது ஆண் ஆகிய 5 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் என்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.