முகப்பேர் வேலம்மாள் பள்ளி நடத்தும் தமிழ் மொழி திறன்வளர் சர்வதேச போட்டிகள்

முகப்பேர் கிழக்கு வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி நடத்தும் 35வது ஆண்டு வள்ளல் பாண்டித்துரை நினைவு தமிழ்மொழி திறன்வளர் போட்டிகள்

பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வளப்படுத்தவும் முகப்பேர் கிழக்கு வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி திறம்படச் செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வள்ளல் பாண்டித்துரை நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்மொழியில் பற்பல போட்டிகளை வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தி வந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவினைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இணையம் வழியாக இந்தப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்தும் 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 21 ஆகஸ்ட் 2020 வரை இணையம் வழியில் பதிவு செய்யலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது வீடியோ பதிவுகளை இணையம் வழியில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி :

பேச்சுப் போட்டி – 26 ஆகஸ்ட் 2020,

பரதநாட்டியப் போட்டி – 27 ஆகஸ்ட் 2020

கர்நாடக இசைப் போட்டி – 28 ஆகஸ்ட் 2020.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம் ரூபாய் 4 லட்சத்திற்கும்மேல்  ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தலா 10 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, www.velamalnexus.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது onlineevents@velamalnexus.com -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது +91 7358390402 என்ற கைபேசி எண்ணை அழைக்கவும்.