தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தவும் மருத்துவமனை கட்டடங்கள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் ரூ. 76.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்களை அமைக்க ஏற்கெனவே ரூ. 75.28 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.