அம்மா உணவகத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கட்டிடத்தையும் 20 கோடி ரூபாய் மதிப்பில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கதிரியக்க இயந்திரத்தின் செயல்பாட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கதிரியக்க இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறன்றனர். உணவருந்திய வாடிக்கையாளர் ஒருவரிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து விசாரித்தனர்.

மேலும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பணியாளர்களிடம் உணவில் சேர்த்துள்ள காய்கறிகள் குறித்தும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தனர்.