கோவையில் நேற்று (14.7.2020) 188 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 1,480 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது வரை 1,480 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் சூழலில், பாதிக்கப்பட்டோருக்கு இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் 1,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சூழலில், 320 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தரமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.