டாஸ்மாக் ஊழியருக்கு கொரோனா தொற்று

கோவை வடவள்ளி அடுத்த வீரகேளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியானதால், கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேளம் பகுதியில் செயல்பட்டு வந்த (1633) டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளருக்கு உடல் நலம் குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து ஊழியர் ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடிசியா அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் டாஸ்மாக் கடை அருகே கிருமி நாசினிகளை தெளித்தனர். மேலும் கடையில் மேற்பார்வையாளர், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வீரகேரளம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அங்குள்ள மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.