வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக பயணிக்க வேண்டாம்

வெளிமாநிலத் தொழிளாலர்கள் தங்கள் சொந்த ஊருக்கு  எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று தங்களது குடும்பங்களுடன் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை கண்களால் காண முடியவில்லை. சொந்த  ஊருக்கு மேற்கொள்ளும் பயணங்களில் சிலர் சாலை விபத்தில் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அண்மையில் இதைப்போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிச்சையாக செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுத்தியுள்ளார்.

அதேநேரம், நாள்தோறும் 10,000 பேரைத் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் உள்ளது என்றும், அதனால் தற்பொழுது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.