10 நாள்கள் தனிமைப்படுத்தினால் போதும் – சிடிசி அமைப்பு

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான சிடிசி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதில் ஒருவருக்கு அறிகுறியுடன் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்னர் அவருக்கு அறிகுறிகள் இல்லையெனில் மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் என்றும் அறிகுறியில்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் ஆர் – டிபிசிஆர் சோதனையை மீண்டும் செய்யத் தேவையில்லை எனவும் தெரிவிக்கிறது.