பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம்

கொரோனாவால் தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவிலிருந்து தப்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள்.

இந்த கபசுர குடிநீர் விநியோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஆரோக்கியம் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள், போலீஸாருக்கு முதல்வர் பழனிச்சாமி கபசுரக் குடிநீரை வழங்கினார்.

கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். இவை இரண்டும் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என தமிழக அரசு விளக்கியுள்ளது.