கொரோனா நிவாரணத்திற்கு சிங்கை முத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகத்தை காக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்த அரசிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பலரும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

இன்று (7.4.2020) தமிழக உள்ளாச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஐந்து லட்சத்தை பீளமேடு மணிமஹால் உரிமையாளரும் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவருமான சிங்கை முத்து வழங்கினார்.