கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் வரும் ஏப்ரல் 14 வரை பொதுமக்கள் கட்டணமின்றி உணவருந்தலாம். அதற்கு செலவாகும் தொகையை கோவை அதிமுக கழகமே செலுத்தும் என அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவி்த்துள்ளார்.
கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். இனி இந்த அம்மா உணவகங்களில் சாப்பிடும் வெளி மாநில மக்கள் உட்பட அனைவருக்கும் உண்ணும் உணவின் செலவை கோவை அதிமுக கழகமே செலுத்தும் என அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவி்த்துள்ளார்.