ஃபெடரேஷன் கோப்பை கூடைப்பந்து: மகளிர் பிரிவில் தமிழக அணி வெற்றி

 

ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெற்றி பெறுள்ளது.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்,அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், பி.எஸ்.ஜி  ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் 31அவது கூடைப்பந்து போட்டிகள் கோவை, பி.எஸ்.ஜி தொழில்நுட்பப கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கின.

ஆடவர் பிரிவின் முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராணுவ அணி 57-51 என்ற புள்ளிக் கணக்கில் விமான படை அணியை தோற்கடித்தது. இரண்டாம் ஆட்டத்தில் டேராடூன் ஓ.என்.ஜி.சி  அணி 75-64 என மத்திய ரயில்வே அணியை வென்றது.

மகளிர் பிரிவு: மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில், தெலங்கானா 70-39 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

அடுத்த ஆட்டத்தில்,கேரளா அணி 74-36 என தில்லியை வென்றது. மற்றோர் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 69-51 என சத்தீஸ்கர் அணியை சாய்த்தது. மேலும் ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 72-67 என போராடி மேற்கு வாங்க அணியைத் தோற்கடித்தது.