என்.ஜி.பி கல்லூரி  புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும் இணைந்து  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தில் இரு கல்லூரிகளின்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம், கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்படுதல், கல்லுரிகளில் நடைபெறும் விரிவாக்கம் மற்றும் கிராமப்புற விழிப்புர்ணர்வு முகாம்கள் நடத்துதல் போன்ற செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடபட்டுள்ளது. இந்நிகழ்வில் வேளாளர் மகளிர் கல்லூரி செயலர் சந்திரசேகர், கல்லூரியின் முதல்வர் மரகதம், என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், நிர்வாக முதன்மையர் சரவணன் மற்றும் கல்லூரின் பல்வேறு துறை தலைவர்களும், ஆசியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.