ஆர்.வி கல்லூரியில் பசுமை பொங்கல்

டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் பசுமைப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் சுகுணா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நம் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து அனைத்து துறை சார்பிலும் பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களின்  கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்றவை  நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.