கேபிஆர் கல்லூரியில் இளைஞர் தின விழா

கோவை, அரசூர் பகுதியில் அமைந்துள்ள கேபிஆர் கல்லூரியில் விவேகானந்தர் அவர்களின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் சுவாமி நிர்மலேஷனந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி நிகழ்ச்சியில் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறந்த சமுதாயப் பணியாற்றிய தோழர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சாந்தகுமார், சமூக ஆர்வலர் ராமமூர்த்தி, ராமகாரிய சேவா சங்கம் ராமகாரியம் சுகுமார் மற்றும் சமூக ஆர்வலர் யோகானந்தன் மாரிமுத்து ஆகியோருக்கு சுவாமி விவேகானந்தர் சமூக சேவை விருது வழங்கப்பட்டது. முன்னதாக கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி  வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.