“விந்தை மனிதர்கள்” புத்தக வெளியீட்டு விழா

நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம் எழுதிய “விந்தை மனிதர்கள்” என்ற புத்தக வெளியீட்டு விழா இந்திய தொழில் வர்த்தக சபையின் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் குழுமத்தின் இயக்குநர் கே. வினாயகம், சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் முதன்மை வகித்தனர்.

“விந்தை மனிதர்கள்” என்ற புத்தகத்தை
சென்னை சில்க்ஸ் குழுமத்தின் இயக்குநர் கே. வினாயகம் வெளியிட சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன் பெற்று கொண்டார்.

இது குறித்து இயகோகா சுப்பிரமணியம் பேசுகையில், இந்த புத்தகத்தில், சமுதாயத்தில் நடக்கின்ற பல விந்தைகளை கண்டு, அந்த நிகழ்வுகளின் தொகுப்புகளையும், நாம் அன்றாடம் கடந்து சென்ற, கவனிக்க தவறிய விந்தை மனிதர்கள் தொகுப்பாக கொண்டது இந்த புத்தகம் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயண சாமி மற்றும் உறுப்பினர்களும், நன்னெறிக் கழகத்தின் உறுப்பினர்களும், கலந்து கொண்டனர்.