மக்கள் சேவை மையம் சார்பாக உலக நெசவாளர் தினம்

கோவையில் இயங்கி வரும் மக்கள் சேவை மையம் மற்றும் டிரீம் சோன் சார்பாக உலக நெசவாளர் தினம் எஸ்.என்.ஆர். கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கெளரவ விருந்தினராக ஆரக்கிடெக் பாணு கோம்ஸ், டிரீம் சோன் தமிழக பொறுப்பாளர் அருண்பிரசாத் மற்றும் தேசிய கைத்தறி மேம்பாட்டு நிறுவனத்தின் இணை பொது மேலாளர் ராஜ்குமார் பங்கேற்றானர்.

நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவிகள் கைத்தறி நெசவு ஆடைகளை அணிந்து, ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தினர்.