தமிழ்நாடு ஊரக இயக்க மேலாண்மை (மகளிர் திட்டம்) மூலம் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் 05.08.17 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கோவை, காருண்யா மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதால், 8ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதி சான்று (அசல் மற்றும் நகல்) புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.