பிஎஸ்ஜி தொடக்கப்பள்ளியில் ஓணம் பண்டிகை

பீளமேடு பிஎஸ்ஜி தொடக்கப்பள்ளியில் இன்று (10.09.19) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும், மாணவர்களும் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். பள்ளி மாணவன் மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்து மாணவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். பாரம்பரிய உடையணிந்து மாணவிகள் நடனமாடியதும், அத்திப்பூ கோலமும் விழாவை அழகூட்டியது.