ஈசா பொறியியல் கல்லூரி ஓணம் விழா, மாணவர்கள் உற்சாகம்.

கோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி , ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி தலைவர் டி டி ஈஸ்வரமூர்த்தி, தலைமைவகித்தார்.கல்லூரிசெயலாளர் டிஇ சுஜாதா முதன்மை செயல் அதிகாரிடிஇஅஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ்கல்லூரி கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி உடன் இருந்தார் மலையாளம் மற்றும் தமிழ் மாணவர்களுடன் பூக்கோலமிட்டுபண்டிகையை கொண்டாடினர்.

தொடர்ந்து, கேரள செண்டை மேளம், அத்திப்பூ கோலப்போட்டி, திருவாதிரைகளி, மோகினி நடனம், உறியடி, கயிறு இழுக்கும் போட்டி, மலையாள மங்கா, மலையாள மன்னா, நாடன் பாட்டு, ஓணப்பாட்டு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. ஓணப்பண்டிகையின் பாரம்பரிய, 18 வகையான உணவுகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாக்களில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.