குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏரி, குளங்கள் வறண்டாலும் எதிர்காலத்தில் 870 எம்எல்டி நீர் மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார். தமிழகத்தில் குடிமாரமத்து பணிகள் மற்றும் வண்டல் மண் எடுக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.