நேர் கொண்ட பார்வை – ஒரு வெற்றி படம்

இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேர் கொண்ட பார்வை திரைப்படம் “பிங்க்” என்னும் இந்தி திரைப்படத்தின் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிவோம். இதில் அஜித் குமார்,ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரங்கராஜ் பாண்டே, தனியார் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். இவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார் என்ற செய்தியே முதலில் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தந்தது. ஏனென்றால் “பிங்க்” ஒரு அமைதியான திரைப்படம். அதாவது இதில் சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லை. அஜித் ஒரு படம் நடிக்கிறார் என்றால் அது ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்க வேண்டும் என்பது தல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனால் அதற்கு முற்றிலும் வேறுபட்ட படம் இது.

இருபினும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இது தற்பொழுதைய சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட திரைப்படமாக இருப்பதால் தான். இது குறிப்பாக பெண்களை மையமாக கொண்டதால் பெண்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் கதையில் கரு மாறாமலும், அஜித்தின் மாஸ் குறையாமலும் இதனை காட்சிக்கு கொடுத்த இயக்குனர் வினோத் தான் இதன் கதாநாயகன். இது கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும்.