அரிமா சங்கம் நடத்திய இயற்கை மருத்துவ முகாம்

Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜீசுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை, கோவை B.R.புரம் அரிமா சங்கம், கோவை நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிங்காநல்லூர் ஸ்ரீ விஷ்ணு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு கோவை மாவட்ட அரிமா சங்க முன்னாள் ஆளுநர் MJF. Er. அரிமா. K. ராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட அரிமா சங்க ஆளுநர் PMJF. அரிமா R. கருண பூபதி அவர்கள் முகாமைத் துவக்கி வைத்தார்.

GST ஒருங்கிணைப்பாளர் அரிமா. ராம்குமார், கனகராஜ், மாவட்ட தலைவர் அரிமா. T. செந்தில், மண்டலத் தலைவர் அரிமா. காளியப்பன், வட்டார தலைவர் அரிமா. ரகுபதி, அரிமா. ராயல் சின்னசாமி, அரிமா. பாபு ராஜேந்திரன், அரிமா. பிரபு, அரிமா. லாலா முத்துராஜ், அரிமா. நந்தகுமார், அரிமா. தேவராஜ் ஆகியோர் முகாமிற்கு முன்னிலை வகித்தனர்.

கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனரும், நேரு நகர் அரிமா சங்க செயலருமான அரிமா. ச. செந்தில்குமார் முகாமை ஒருங்கிணைப்பு செய்தார்.

அரிமா. Dr. M.பிரசன்ன மணிகண்டன் மற்றும் மருத்துவக் குழுவினர் சுமார் 150 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு இயற்கை மருந்துகளை இலவசமாக வழங்கினர்.