வெள்ளிக்கிழமை தோறும் சாமிக்கு விரதம்

தனக்கு ஒரு தலைவரின் மேல் ஆர்வம் ஏற்பட்டால் அவர்களின் புகைப்படம் வீட்டில் வைத்துக்கொள்வார்கள். அதற்கு அடுத்தபடியாக  மாலையிட்டு வணங்குவார்கள், அதுவும் இறந்தவர்களுக்கு மட்டும் தான். அனால் தெலங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்னும் இளைஞர் தனது வீட்டின் முன்பு 6 அடி உயரம் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிலை வைத்துள்ளார்.  இவரது சிலைக்கு நாள்தோறும் இந்த இளைஞர் பூஜை செய்து வருகிறார்.

“அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இந்த இளைஞர், வாரம் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வெள்ளிகிழமை விரதம் இருக்கப்போவதாக கூறி அதிர வைத்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி, பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு தேசிய தலைவர்களுக்கு சிலைகள் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிலைக்கு இளைஞர் கிருஷ்ணா தினந்தோறும் பூஜை செய்து வருவது எதற்காக என்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

”டிரம்ப் எனக்கு கடவுளுக்கு நிகரானவர். ரூ.1.5 லட்சம் செலவில் அவருக்காக சிலை வைத்துள்ளேன். இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை டிரம்புக்காக விரதம் இருக்க உள்ளேன்” என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.