ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அறிக்கை

டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை டாலி பார்க் பிசினஸ் சர்வீஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. இந்நிகழ்விற்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர்  வெ. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்  வே.சுகுணா அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் இந் நிறுவனத்தின் மேலாளர் ஜோயல் ஆண்ட்ரூ அவர்கள் மற்றும் பொது மேலாளர் எம். கார்த்திக் அவர்கள்  கலந்துகொண்டனர்.இதற்கான  ஒப்பந்தத்தில் பொது மேலாளர் எம். கார்த்திக் அவர்கள்  கையெழுத்திட்டார். இந்த  ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு  டாலி  வகுப்புகள் நடைபெறுவதோடு அதற்கான வேலை வாய்ப்புகள் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் சி .என் ரூபா அவர்கள்,  கணினி அறிவியல் துறைத்தலைவர் திருமதி. சண்முகப்பிரியா அவர்கள் கலந்துகொண்டனர்.