என்.ஜி.பி   பள்ளியில் 6  ஆவது  ஆண்டு விழா மற்றும்  பட்டமளிப்பு விழா

கோவை என்.ஜி.பி பள்ளியில் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை  மருத்துவமனை   மற்றும் ஆராய்ச்சி  மையத்தின்  தலைவர்,  மருத்துவர்   நல்ல.ஜி.பழனிச்சாமி அவர்கள் தலைமை தாங்கினார். அவரோடு மருத்துவர்  கமலேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பள்ளிச்  செயலர்,  மருத்துவர்  தவமணி தேவி  பழனிச்சாமி, கோவை மருத்துவ ஆராயச்சி மையத்தின் இளம் அறங்காவலர் அருண் பழனிச்சாமி  மற்றும் பள்ளி இயக்குனர் மதுரா பழனிச்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பிரீத்தா பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் குழந்தைகளுக்கு பட்டங்களை  வழங்கிச்  சிறப்பித்தார். நல்ல பழனிச்சாமி அவர்கள் பேசுகையில், “இங்கு  நீங்கள்  காணும்  நீர்த்துளிகளைப்  போன்ற  இந்த  சிறு பிள்ளைகள்  தான்  எதிர்காலத்தில்  ஆற்றல்மிகு  பிரவாகமாய்  ஊற்றெடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார். இவ்விழாவில் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.