ராசாமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 11.3.2019 மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி அவர்கள் தலைமையில் தேர்தல் நன்னடத்தை விதி தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.