ஆர்.வி. கல்லூரியில் மென்பொருள் பயிலரங்கம்

கோயமுத்தூர் அடுத்த காரமடையில் உள்ள டாக்டர் ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில் ஐந்து நாள் கணினி அறிவியல் துறை சார்பில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

துறைத்தலைவர் அ.சண்முகப்பிரியா வரவேற்றார். முதல்வர் முனைவர் வே.சுகுணா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேற்கு ஆப்பிரிக்கா, ப்ளூகிரெஸ்ட் பல்கலைக்கழக ஐ.சி.டி. தலைவர் மற்றும் அசூர் ஐ.டி. நிறுவனத் தலைமைப் பயிற்சியாளர் விபின்சந்தர் செல்வராஜ் பேசினார். துறை உதவிப் பேராசிரியர் என்.சித்ரா நன்றி கூறினார்.