மத்திய அரசின் தூய்மை நகரம் கீழ் ஸ்வச் சர்வெக்ஷான் திட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மத்திய அரசின் தூய்மை நகரம் – ஸ்வச் சர்வெக்ஷான் ( Swachh Survekshan ) திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் தரவரிசையை உயர்த்தும் வகையில் மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர்கள் த. ஞானவேல், பார்வதி மண்டல உதவி ஆணையாளர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.