அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை‌!

திமுக கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நாளை 8-2-2024, வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில், கோவை விமான நிலையத்தில் வருகை‌ தருகிறார் என மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்.எல்.ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச்‌ செயலாளர்‌ தளபதி முருகேசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்‌ கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழக, ஒன்றிய கழக‌, பகுதிக் கழக,பேரூர் கழக, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகரக் கழக, ஒன்றிய கழக‌, பகுதிக்கழக, பேரூர்க் கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.