பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் பெரும்  கனமழையால் பாதிப்படைந்த தென்தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, உடை,அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் தற்போதைய அத்தியாவசிய பொருட்களான பால் பவுடர், போர்வை,துண்டுகள், மெழுகுவர்த்தி, பிரட் , பிஸ்கட், நாப்கின், சோப் உள்ளிட்ட பொருட்களை  நேரடியாக கொண்டு சென்று வழங்கினர்.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேரிடர் மீட்பு குழுவை சார்ந்த காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌரி சங்கர், கார்த்திக், ராஜா சரவணன், பிரபு, மெய்யரசன், சுஜன், பிரவீன், சுரேஷ், சக்தி மாதவன், தினேஷ்குமார், டார்வின், குணசேகரன், இளங்கோ, திலீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை நேரடியாக வழங்கி உதவினர்.