கோவையில் பெய்த கனமழையால் புட்டுவிக்கி பாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவையில் நேற்று 300 மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி பாலத்தில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கோவையில் நேற்று மழையின் அளவு 300 மில்லி மீட்டர் பதிவானது. இதில் அன்னூர் 4 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் 29.1 மில்லி மீட்டர், சின்கோனா 3 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 19 மில்லி மீட்டர், வால்பாறை பிஏபி 6 மில்லி மீட்டர் வால்பாறை தாலுக்கா 5 மில்லி மீட்டர் சோலையார் 10 மில்லி மீட்டர் ஆலி யார் 11 மில்லி மீட்டர் சூலூர் 35 மில்லி மீட்டர் பொள்ளாச்சி 35 மில்லி மீட்டர் கோவை தெற்கு 52 மில்லிமீட்டர் விமான நிலையம் 26 மில்லி மீட்டர் பெரியநாயக்கன்பாளையம் 14.20 மில்லிமீட்டர் வேளாண் பல்கலைக்கழகம் 51 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

மேலும் தொண்டாமுத்தூர் நரசிபுரம் மாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாக புட்டுவிக்கி பாலத்தில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழை அதிகரித்ததன் காரணமாக கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.