கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் டவர் முன்பு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையெழுத்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், செயலர் தவமணி பழனிசாமி, கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி, போலீஸ் எஸ்.பி பத்ரிநாராயணன், மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ், மேற்கு மண்டலம் ஐ.ஜி புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டார்.