ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் வானை அதிரவைக்கும் பஞ்சவாத்ய இசை

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவையில் முதல்முறையாக ‘பஞ்சவாத்ய உத்சவ்’ என்ற 50 கலைஞர்களின் பஞ்சவாத்ய இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கிக்கானி பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமிலை, கொம்பு, மத்தாளம், தாளம் மற்றும் இடக்கை போன்ற வாத்தியங்களை கொண்டு வானம் அதிரவைக்கும் கம்பீர இசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கைத்தட்டி மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்வில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் கலந்துகொண்டார்.