ஐயப்பன் கோவிலில் ஓணம் சிறப்பு வழிபாடு

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சித்தப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு ஏரளமான கேரள மக்கள் வசித்து வரும் நிலையில் அதிகாலை முதலே ஐயப்பன் கோவிலில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் செண்டை மேளம் முழங்க மூல தெய்வமான ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.