முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

கோவையில் உள்ள முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த அறக்கட்டளை சார்பில் பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், ஏடிஜிபி ரவி, மேற்குமண்டல ஐ ஜி பெரியய்யா, மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை குடும்பத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு அரசு துறை வேலை வாய்ப்புகள் பெற்றிய TNPSC, IAS மற்றும் IPS உள்ளிட்ட னைத்து தேர்வுகளுக்கான பயிற்சி மைய துவக்க விழா நடைபெற்றது.

இதனையடுத்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற காவல் துறை குடும்ப மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் கோவை காவலர் மருத்துவமனைக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்த பரிசோதனைக் கருவி வழங்கும் விழாவும் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் துறை அறக்கட்டளைக்கான புதிய இணையதளம் துவக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவலர்கள் மற்றும் அவர்களிடம் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.