கோவை புலியகுளத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவையில் மாநகராட்சியில் உள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் படி வியாழக்கிழமை கோவை மாநகராட்சி புலியகுளம் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலைக்கடையில் பொருட்களின் தரம் குறுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது , அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.