கைத்தறி ஆடையுடன் அணிவகுப்பு

கோவை மக்கள் சேவை மையம் சார்பில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.

மேலும் அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமா மஹேஸ்வரி யுவராஜ், ராம்ராஜ் காட்டன் ஆர்த்திகா ஈஸ்வர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிடன் கிளப்பில் தொடங்கி, கலெக்டர் பங்களா வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.