கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திங்கட்கிழமையன்று மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்தும் மணிப்பூர் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் AILU, IAL, PUCL, சமூகநீதி வழக்கறிஞர்கள் சங்கம் சார்ந்த வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து நமது சகோதரிகளுக்கு ஏற்பட்ட இந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தை தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறினர். மேலும் மக்கள் எழுச்சி பெற்று குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.